
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு இந்த பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

