
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோதர தேவாலயத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார்.
வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நகர சபை உறுப்பினர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.

