ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது

பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதுடன் ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையயாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் சுற்றிவளைப்பின்போது விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதானவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதுடன் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )