
திடீரென தீப்பிடித்த கார்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (14) பயணித்த காரொன்று திடீரென தீபற்றி எரிந்துள்ளது.
தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன், காரில் இருந்தவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு சேவைப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

