நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 560 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 560 பேர் கைது

பொலிஸ் மா. அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (14) நடைபெற்ற விசேட சுற்றிவளைப்பில் 560 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், 30,855 பேர் பரிசோதிக்கப்பட்டு, 19 பேர் குற்றங்களில் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

கைது விபரம்:

  • பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய: 312 பேர்
  • திறந்த பிடியாணைகளுக்கமைய: 113 பேர்
  • மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள்: 374 பேர்
  • கவனக்குறைவாக வாகனம் ஓட்டியவர்கள்: 69 பேர்
  • பிற போக்குவரத்து குற்றங்கள்: 4,102 பேர்

பொலிஸ் ஊடகப்பிரிவு, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )