
நேபாளத்தில் பேருந்து விபத்து ; 17 பேர் பலி
நேபாளத்தில் பொக்ரா நகரிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஆற்றில் விழ காரணமான சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES World News

