
ஈரானின் ஆரம்ப பாடசாலையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் உள்ள மினாப் (Minab) நகரில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆரம்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது ஈரானின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, இத்தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
CATEGORIES Sri Lanka

