
கொழும்பில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டம்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டித்து இன்று (06) கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“எண்ணெய்க்காக இரத்தம் வேண்டாம்” (No Blood for Oil) என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் இலங்கைக்கான ஈரானிய தூதர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மத்திய மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன், கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

