
ஈரானில் மற்றொரு நிலநடுக்கம்
ஈரானின் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே இன்று (7) அதிகாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவில்
10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு வாரத்தில் ஈரானை தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இது.
செவ்வாயன்று ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கெராஷில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

