
பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி ஊடாக பயணிக்க ஈரான் அனுமதி பாகிஸ்தான்
பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
மிக மோசமான எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த உடன்படிக்கையின்படி, தினசரி இரண்டு கப்பல்கள் ஜலசந்தியைக் கடக்க அனுமதிக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
இதனை அமைதிக்கான ஒரு முன்னோடியாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையாகவும் அவர் வர்ணித்துள்ளார்.
இஷாக் தார் தனது சமூக வலைத்தளப் பதிவில் அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளமை, இது வெறும் இருதரப்பு ஒப்பந்தம் மட்டுமல்ல, ஒரு சர்வதேச இராஜதந்திர முயற்சி என்பதைக் காட்டுகிறது.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நீர்வழிப்பாதை முடங்கியுள்ளது. இதனால் சுமார் 2,000 கப்பல்கள் ஜலசந்தியின் இருபுறமும் தேங்கியுள்ளன.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு (40% அதிகரிப்பு)
100 டொலரைத் தாண்டியுள்ளது .
உலகளாவிய கடல்சார் போக்குவரத்து இந்த நீர்வழிப்பாதை ஊடாக 90% வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் கூற்றுப்படி, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வர்த்தக பாதிப்பு இதுவாகும்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இந்த ஜலசந்தியை ஒரு சோதனைச் சாவடியாக மாற்றியுள்ளது.
கப்பல்கள் தங்கள் சரக்கு மற்றும் பணியாளர் விபரங்களைச் சமர்ப்பித்து அனுமதி குறியீட்டைப் பெற வேண்டும்.
சில கப்பல்கள் ஒருமுறை கடப்பதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரை கட்டணமாக (சீன யுவான் மூலம்) செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியக் கப்பல்களும் கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் சுல்தான் அல் ஜாபர், இந்த முடக்கத்தை “பொருளாதார பயங்கரவாதம்” என்று சாடியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்குக் குறைத்துள்ளதாகவும்,
அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

