
நீர்கொழும்பில் 550 கிலோ பீடி இலைகள் பறிமுதல் ; இருவர் கைது
நீர்கொழும்பு கலப்பு பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, 550 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 15 மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 553 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

