2025 சாம்பியன்ஸ் டிராபி ; 2 ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று

2025 சாம்பியன்ஸ் டிராபி ; 2 ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் இன்று (05) மோதுகின்றன.

அதன்படி, இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகும்.

தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் ஐ.சி.சி போட்டிகளில் போட்டித்தன்மையுடன் போட்டியிடுகின்றன.

2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அண்மையில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

அதற்கு பதிலடி கொடுப்பதற்காக தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இதுவரை 73 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

அதில் தென்னாப்பிரிக்கா 42 போட்டிகளிலும், நியூஸிலாந்து 26 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு போட்டி எந்த வித முடிவின்றி சனமனிலையில் முடிந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)