
காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மாத்தறை, கிரிந்த, அதகலவெல்ல பகுதியில் நேற்று (10) காட்டு யானை தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸமஹாராமை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மீன்பிடி தொழிலுக்காக மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து கிரிந்த துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது வீதியில் இருந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சடலமானது பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka