
நாளை பாராளுமன்றில் உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும்
குரங்குகளை கணக்கெடுப்பு செய்யும் திட்டம் நாளை (15) இடம்பெறவுள்ள நிலையில் பாராளுமன்றில் உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று(14) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “சபாநாயகரே நாளை இந்த பாராளுமன்றில் உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்கப்படவேண்டும்.
நாளை அதிகாலை 8 மணி தொடக்கம் 5 மணிவரை நாட்டில் முக்கிய கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
நாங்களும் அதற்கு செல்ல வேண்டும். இங்குள்ள 225 உறுப்பினர்களையும் சேர்த்தே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். பாரிய நிலப்பரப்பை பெற்று, பாரிய நிதிச்செலவில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஆண்குரங்குகளையும் பெண்குரங்குகளையும் வேறுபடுத்தி ஏதோ ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் கூறிவருகிறது. இதனை எவ்வாறு அரசாங்கம் சாத்தியமாக்கபோகின்றது என்பதை பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.” என தெரிவித்துள்ளார்