
இந்திய மீனவர்கள் மூவர் கைது
இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகைக் கைப்பற்றி, மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அருகில் வடக்குக் கடல் பகுதியில் நேற்று (17) இரவு நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் இந்திய மீனவர்களை கே.கே.எஸ் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்,
மேலும் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மயிலிட்டி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
CATEGORIES Sri Lanka