
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
கொழும்பு – புளுமண்டல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இப்பாகேவத்த பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு – புளுமண்டல் பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மதனமோதக போதை மாத்திரைகள் 21 என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புளுமண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளுமண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.