மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் மேர்வின் சில்வா சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று (03) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள பிரசன்ன ரணவீர உட்பட மூன்று பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது, மேலும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )