சிறி தலதா வழிபாட்டின் மூன்றாம் நாள் இன்று

சிறி தலதா வழிபாட்டின் மூன்றாம் நாள் இன்று

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நாட்டின் பௌத்தர்களின் சிகரமான மிகவும் புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்று (20) ஆகும்.

அதன்படி, புனித தந்த தாது காட்சி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மாலை 5.00 மணி வரை இதை நடத்த தலதா மாளிகையால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

“சிறி தலதா வாழிபாடு” எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதுடன், இதன் தொடக்க விழா கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

முதல் நாளிலிருந்து, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு சென்று புனித தந்த தாதுவை வழிபட்டு வருவதுடன், அங்கு வரும் பக்தர்களின் தாகத்தைத் தணிக்க 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )