
புதிய போப் தேர்வு பணிகள் 7-ந்திகதி தொடக்கம்
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் திகதி காலமானார்.
போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கியுள்ளது.
அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) மே மாதம் 7-ந் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.
CATEGORIES World News

