மேலும் ஐந்து தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் 22 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது

மேலும் ஐந்து தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் 22 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது

மேலும் ஐந்து தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் 22 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தேர்தல் சட்டங்களை மீறுவது உள்ளிட்ட புகார்கள் தொடர்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான 08 குற்றவியல் முறைபாடுகளும் ,
தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான 27 முறைபாடுகளும்
கிடை க்கப்பெற்றுள்ளன .

இதனடிப்படையில் , உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இதுவரை
43 வேட்பாளர்கள் உட்பட 233 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )