மொஸ்கோவின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன

மொஸ்கோவின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன

வான்வழித் தாக்குதல் அபாய எச்சரிக்கையால் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ரஷியா மீது ஏவப்பட்ட யுக்ரைனின் 19 ட்ரோன் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக மொஸ்கோ மேயர் தெரிவித்தார்.

ட்ரோன் தாக்குதல்களின் சிதைந்த பாகங்கள் குப்பைகளாக நெடுஞ்சாலையில் விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களையும் அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )