தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நடத்தியதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இது தவிர புதுச்சேரியில் 13 பேரும், கேரளாவில் 15 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )