சுற்றாடலை மீட்டெடுத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே நமது பொறுப்பு

சுற்றாடலை மீட்டெடுத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே நமது பொறுப்பு

பொதுவான தேசிய உணர்வுடன் பூமியுடன் பிணைப்பைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது என்றும், இந்தப் பொறுப்பை புறக்கணிக்கக் கூடாது என்றும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் இதில் இணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கேகாலை நிதஹஸ் மாவத்தையில் இன்று (05) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் “பிளாஸ்டிக் பாவனையை ஒழிப்போம்” என்பதுடன், “முளைப்பதற்கு இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

சுற்றாடல் மறுமலர்ச்சிக்குத் தேவையான சந்தர்ப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், உலக சுற்றாடல் தினத்தை ஒரு சம்பிரதாயமாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறது.

பந்துல பெத்தியாவின் வாழ்விடமானது சரணாலயமாக அறிவிக்கப்படல், நில்கல உள்ளிட்ட புதிய வனப்பகுதிகள் குறித்த நான்கு வர்த்தமானிகளை வெளியிடல், 03 சூழல் நேய மாதிரிப் பாடசாலைகள் மற்றும் பசுமைப் புகையிரத நிலையங்களை பாராட்டல் என்பன இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

சுற்றாடல் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், அனைத்து அரச நிறுவனங்கள், “Clean Sri Lanka” செயலகம் மற்றும் சுற்றாடல் அமைப்புகளுடன் இணைந்து இந்த ஆண்டு சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )