கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல், ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (07) காலை இடம்பெற்றது.

ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் ஹுதா பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஸாபித் (ஸரயி,றியாதி) நடாத்தி வைத்தார்.

இம்முறை வழமையைவிட அதிகமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சந்தோசத்துடன் புனித ஹஜ்ஜுப் பெருநாள் நபிவழி திடல் தொழுகையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

image
image
image
image
image
image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )