
வெலிகமவில் துப்பாக்கிச் சூடு
வழக்கறிஞர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் வெலிகம உடுகாவ பகுதியில் இன்று (16) பதிவாகியுள்ளது.
இந்த, துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

