
49வது தேசிய விளையாட்டு போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பம்
49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று (17) காலியில் உள்ள தடல்ல உள்ளக மைதானத்தில் ஆரம்பமாகியது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன், இந்த ஆரம்ப நிகழ்வில் காலி மாநகர சபையின் மேயர் சுனில் கமகே மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் காலியில் உள்ள தடல்ல விளையாட்டு மைதானம், ஹிக்கடுவ நகர சபை விளையாட்டு மைதானம் மற்றும் மாத்தறையில் உள்ள கொட்டவில உள்ளக மைதானத்திலும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.
காலி மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sports News

