
பாகிஸ்தானில் கனமழை ; 124 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளன.
எனவே கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 124 பேர் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
CATEGORIES World News

