
???? Breaking News : தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிவிப்பு
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியில் இருந்து நீக்குவதற்காக அவர் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

