பலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து லண்டனில் மக்கள் போராட்டம்
பலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம் நடைபெற்றது .
காஸாவில் உணவை பெற்றுக்கொள்ள காத்திருந்த மக்கள் கொல்லப்பட்டமைக்கு இந்த போராட்டம் நடைபெற்றது .
பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
உணவு பெற வந்த 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமை அலுவலகம் கூறுகிறது.
எனினும் எச்சரிக்கை நடவடிக்கையாகவே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் , உயிரிழப்புகள் எண்ணிக்கை மிகைப்படுத்தி காட்டப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது
CATEGORIES World News

