
2025 ஆண்டில் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இந்த ஆண்டில் இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , நீரில் மூழ்கிய விபத்துக்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

