
செம்மணியில் ஆரம்பமான ‘நீதியின் ஓலம்’ கையொப்பப் போராட்டம்
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையெழுத்து போராட்டம் இன்று யாழ் செம்மணியில் தாயகச் செயலணி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் அணையா விளக்கு போராட்ட தூபி அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த கையெழுத்து போராட்டத்திம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த கையெழுத்து போராட்டமானது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவுள்ளது.

