
தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்ட தபால் ஊழியர்கள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை இன்று (24) மாலை 4.00 மணி முதல் மேற்கொள்ள இணங்கியுள்ளதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்களுக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர், அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

