சுகாதாரம் அமைச்சருக்கும் இலங்கைக்கான சவுதி அரேபியா தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியா இராச்சியத்தின் தூதர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Alkahtani) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சமீபத்தில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைக்கும் சவுதி அரேபியா இராச்சியத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, நாட்டின் சுகாதார சேவையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஊடகத் துறையை மேம்படுத்துவதற்கான வகையிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

நாட்டில் வீண்விரயம், மோசடி மற்றும் ஊழல் இல்லாத மக்களுக்கு உகந்த சுகாதார சேவையை உருவாக்கும் அரசாங்கத்தின் புதிய கொள்கைக்காக சவுதி அரேபியா இராச்சியத்தின் பாராட்டுகளை தூதர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் முன்னேற்றத்திற்கு தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தூதர் தெரிவித்தார். நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் சவுதி அரேபியா அரசு அளித்து வரும் ஆதரவை நினைவு கூர்ந்த அமைச்சர், எதிர்காலத்தில் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும், வழங்கப்பட்ட ஆதரவுக்கு சவுதி அரேபியா தூதருக்கு நன்றியையும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )