
ஹரக்கட்டாவை தடுப்பு காவலில் வைக்குமாறு பாதுகாப்புச் செயாலாளர் உத்தரவு
ஹரக்கட்டா எனப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை தடுத்து வைப்பதற்கு பாதுகாப்புச் செயாலாளரினால் தடுப்பு காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதி மன்றத்திற்கு இன்று (08) அறிவித்துள்ளார்.
குற்றபுலனாய்வு திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றமை தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை பாதுகாப்புச் செயாலாளரினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

