
ரஜதலாவ பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அமீரக மீட்பு குழுவினர்
ரஜதலாவவில் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இங்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளிட்ட இரண்டு சிறுவர்கள் மற்றும் காயமடைந்த 8 பேருக்கு சம்பவ இடத்திலேயே அவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அத்துடன் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 8 பேர் இங்கு மீட்கப்பட்டனர்.
குறித்த குழுவினர் மொத்தம் 18 பேரை மீட்டுள்ளதாக, கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

