முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )