
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் !
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இன்று வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

