
நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மனம்பேரி
கைது செய்யத் தேடப்படும் சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யத் தேடப்படும் சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் 1மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

