
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்
கொழும்பின் பேர வாவியிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையம் வரையிலான விமான சேவை, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும், உள்நாட்டு வானூர்திகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வானூர்தி குறித்த வாவியில் தரையிறக்கப்பட்டது.
CATEGORIES Sri Lanka

