
சீனா சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகலாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியா இன்று (12) சீனாவின் பெய்ஜிங்கிற்கு சென்றடைந்தார்.
‘ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் முழுமையான வளரச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை’ எனும் கருப்பொருளின் கீழ் பிஜிங்கில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பும் இணைந்து இக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் அமரசூரிய ஒரு முக்கிய உரையை நிகழ்த்துவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

