
இலங்கைக்கு வழங்கிய யானைகளை மீண்டும் பெற தீர்மானித்த தாய்லாந்து அரசு ?
இலங்கைக்கு தாய்லாந்து அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் பெறுவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஒக்டோபர் 28ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் யானைகள் இரண்டையும் இலங்கை அரசாங்கம் மோசமாக நடத்துவதாக தெரிவித்தே தாய்லாந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

