
முருகப்பெருமான் திருக்கல்யாணம்
கந்த சஷ்டிக்கு மறுநாள் நடைபெறும் முருகர் திருக்கல்யாண தினம், திருமணத் தடைகளை நீக்கி, குழந்தை பாக்கியம் அருளும் புண்ணிய நாள்.
இந்நாளில் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய செட் வழங்கி வழிபட்டால் வளமும் அமைதியும் நிலைக்கும்.
சூரசம்ஹாரத்துடன் கந்த சஷ்டி திருவிழா நிறைவடைந்த மறுநாளே “முருகர் திருக்கல்யாண தினம்” எனும் மிகப்பெரும் புண்ணிய நாள்.
இந்த நாளில் முருகப்பெருமான் தெய்வானை மற்றும் வள்ளியை திருமணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்நாளில் முருகன் ஆலயங்களில் திருக்கல்யாண விழா மிகுந்த ஆனந்தத்துடன் நடைபெறுகிறது.
CATEGORIES Sri Lanka

