
IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவிப்பு
2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக டிசம்பர் 16-ந்திகதி மினி ஏலம் நடக்க இருக்கிறது.
அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.
கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசலை அந்த அணி விடுவித்தது பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார்.
2026 சீசனில் கொல்கத்தா அணியின் POWER COACH ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ரசல் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sports News

