இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பித்த 1 Million Volunteers நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பித்த 1 Million Volunteers நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (National Youth Services Council – NYSC) ஆரம்பித்த 1 Million Volunteers திட்டத்தின் முதல் நிகழ்ச்சி அண்மையில் (5ஆம் திகதி) சிலாபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் பிரதேசத்தில் பல இடங்களில் வீதிகள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணி அதன் முதல் திட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

​இந்த முதல் நிகழ்ச்சி இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அதனுடன் இணைந்த விளையாட்டு நிறுவனங்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், தேசிய இளைஞர் படை (National Youth Corps – NYC), மற்றும் இளைஞர் கழகங்களின் தேசிய சம்மேளனம் (Youth Club National Federation) ஆகியன இணைந்து நடத்தின. இதற்காக 300க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இணைந்திருந்தனர்.

​1 Million Volunteers திட்டத்தின் கீழ் ஒரு தன்னார்வ சேவைக் குழுவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தை பூர்த்தி செய்து எந்தவொரு இளைஞனும் அல்லது யுவதியும் இதில் இணைந்துகொள்ள முடியும்.

​அதன்படி, டிசம்பர் 5ஆம் திகதி சிலாபம் பிரதான வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், இச்சன்பிட்டிய, மெல்புர ஆகிய பிரதேசங்களில் இந்த சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்றன.

​இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் படையின் பணிப்பாளர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )