
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட் டியமை மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னாள் சபாநாயகர் நேற்றுபயணித்த ஜீப் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
சப்புகஸ்கந்த டெனிஸ்மல்லா பகுதியில் இந்த விபத்துஇடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
வாகனத்தில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை மற்றும் அவரது 55 வயது பாட்டி ஆகியோர் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தையும் மேலதிக செஇகிச்சைகளுக்காக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

