
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் முன் போராட்டம்
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இன்று (02) காலை முதல் ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் முன்னிலையில் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆசிரியர் பணிக்கு உடனடியாக இணைத்தல், கல்வியியல் பட்டதாரிகளை வேலையமர்த்துதல் மற்றும் அரசின் 43,000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கல்வி மேம்பாட்டு அதிகாரிகள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

