
பங்களாதேஷில் 4.1 ரிக்டரில் நிலநடுக்கம்
பங்களாதேஷில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் சத்கிரா மாவட்டத்தின் கொலரோவா உபாசிலா பகுதியில் ( Kolaroa upazila)150 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
பங்களாதேஷ் நாடு புவியியல் ரீதியாக மூன்று முக்கிய டெக்டோனிக் தகடுகள் சங்கமிக்கும் நிலப் பகுதியில் அமைந்துள்ளதால் இது ‘நில அதிர்வு மண்டலமாக’ (Seismic Zone) கருதப்படுகிறது.

