
மைத்ரி விக்ரமசிங்கவை FCIDயில் ஆஜராகுமாறு அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க இந்த மாதம் 20 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை குற்றப் புலனாய்வுத் துறை இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்க்கு அறிவித்தது.
முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் பதிவு செய்யவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியின் பிரிட்டன் தனிப்பட்ட பயணத்திற்கான நிதி ஒப்புதலில் பொது நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மூலம் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

