
மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
தம்பலகாமுவ பொலிஸ் களத்திற்கு உட்பட்ட 95வது சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை (24) 95வது சந்தியிலிருந்து சாலியபுர நோக்கிச் செல்லும் பக்கவாட்டு பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாலியபுரத்திலிருந்து 95வது சந்தி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் தம்பலகமுவ பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தம்பலகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

