
???? Breaking News : ஈரான் தலைநகரைத் தாக்கிய இஸ்ரேல் ராணுவம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
ஈரான் மீது ஒரு தற்காப்புத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேல் இந்த அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.
தெஹ்ரானின் மையப்பகுதியான ஜம்ஹூரி பகுதி மற்றும் பல்கலைக்கழக வீதி ஆகிய இடங்களில் இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

